Breaking News:பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.
Breaking News:பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு..
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதிநடைபெறவுள்ளது. இதையடுத்து 1 முதல் 9-ம் வகுப்புவரைமுழுஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6-ல் தொடங்கி 16-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.8 முதல் 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களோடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும், பள்ளி இறுதி வேலை நாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
NOTE: The Study Materials from our site are not created by us. This
Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go
for the creators. Who created the study materials for the teachers of
world.




0 Comments